சனி, மே 25, 2013

அன்பே அழகானது. – தொடர் கதை. பகுதி – 1.

இணையத்தில் கிடைத்த ஓவியம். ஒவியம் வரைந்தவர்க்கு நன்றி.


வாழ்த்துக்கள்.

சாந்தமும், அமைதியும் குடிகொண்ட பிரபலமான குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளி பிரின்ஸ்பல் நாற்பத்தியெட்டு வயது சிஸ்டர் சில்வியா கண் கண்ணாடியை கழட்டி வைத்தபடி சொன்னதும் எதிரே அமர்ந்திருந்த சுதா புன்னகையுடன் நன்றி மேடம் என்றாள்.

எங்க பள்ளியை விட பிரபலமான பள்ளிங்க இங்க இருக்கு. நீங்க நல்லா படிச்சியிருக்கிங்க. உங்க தகுதிக்கு காலேஜ்கள்ளயே நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைக்கும்மே அங்கயெல்லாம் போகாம குறைந்த சம்பளத்துக்கு இங்க டீச்சரா வேலைக்கு சேர என்ன காரணம் ?.

என்னோட சின்ன வயசுல இந்த ஸ்கூல்ல படிக்கனம்ன்னு ஆசை. அப்ப முடியல. இப்ப வேலை பாக்க வேண்டிய நிலை வந்ததும் இங்க சேரனம்ன்னு ஆசைப்பட்டன். விளம்பரத்த பாத்து அப்ளே பண்ணன் என சுதா சொன்னபோது மெல்ல புன்னகைத்த சிஸ்டர் சில்வியா, நீங்க எய்த் டூ டென்த் ஸ்டூடன்ட்க்கு கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுங்க.

சரிங்க மேடம்.

தன் இருக்கையில் இருந்து எழுந்த சிஸ்டர் சுதாவிடம் வாங்க என அழைத்தார்.

மேடம் ஒரு நிமிஷம். உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டிங்களே ?.

தெரியாததைத்தான் கேள்வியா கேட்பாங்க. அதல என்ன தப்புயிருக்கு. கேளும்மா என்றார் சிரித்தபடியே ?.

ஸ்கூல்ல எல்லாரும் இங்கிலிஷ்ல தான் பேசனம்ன்னு வெளியில சொன்னாங்க. நீங்களே தமிழ்ல பேசறிங்களே.

ஆங்கிலம் கத்து தர்றோம் இல்லன்னு சொல்லல. ஆனாலும் இங்க தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வெளிநாட்லயிருந்து வந்த கால்டுவெல் தமிழ் கத்துக்கிட்டு தமிழைப்பத்தி சிறப்பா நூல்கள் எழுதனாரு. ஆப்படியிருக்கும் போது நம்ம மொழிய நாம பேசலன்னா நல்லாயிருக்கும்மா. முதல்ல தாய்மொழிக்கு முக்கியத்துவம், அதுக்கப்பறம் தான் பிறமொழி. மெட்ரிக்குலேஷன் ஸ்கூல்ங்கறதால இங்கிலிஸ்ல தான் பேசுவாங்கன்னு வெளியில இருக்கறவங்க நினைக்கறாங்க. அப்படியெல்லாம் இல்ல பசங்களுக்கு ஆங்கிலத்த கற்று தர்றோம், தாய் மொழிய உணர வைக்கறோம் என்றவர் போகலாம்மா என கேட்டார் சுதா தலையாட்டியதும் நடக்க தொடங்கினார். அலுவலக வாயிலில் நின்று டேவிட் என அழைத்தார். வந்துட்டன் மேடம் என குரல் தந்தப்படி 40 வயதான டேவிட் பவ்யமாக வந்து நின்றார். சுதா இவர் ஆபிஸ் பியூன் டேவிட் என அறிமுகப்படுத்தியவர், டேவிட் இவுங்க சுதா புது அப்பாய்மெண்ட் 8 டூ 10 கெமிஸ்ட்ரி க்ளாஸ் எடுக்கபோறாங்க. இவுங்களுக்கான டைம்டேபிள் கம்ப்யூட்டர் ரூம்ல இருக்கும் பிரிண்ட் அவுட் வாங்கி வாங்க எனச்சொல்லிவிட்டு நடந்தார்.

ஸ்டாப் ரூம்க்குள் நுழைந்த சிஸ்டரை கண்டு அனைவரும் எழுந்து நின்றனர். தன் பின்னால் நின்ற சுதாவை சுட்டிகாட்டி எம்.எஸ்.சி. எம்.பிஎல் முடிச்சியிருக்காங்க. நம்ம ஸ்கூல்க்கு கெமிஸ்ட்ரி டீச்சரா அப்பாய்மென்ட் பண்ணியிருக்கு. நீங்க இவுங்களுக்கு ஒத்தொழைப்பு தரனும் என்றவர் சுதா பக்கம் திரும்பி இதான் ஸ்டாப் ரூம், டைம் டேபிள் தரச்சொல்றன், போய் உட்காருங்க குட் லக் எனச்சொல்லிவிட்டு தன் அறையை நோக்கி நடந்தார்.

சுதா காலியாக இருந்த இடத்தில் அமர அருகில் இருந்த ஒரு ஆசிரியை ஹாய், ஐயெம் மலாதி. இங்கிலிஷ் டீச்சர் என அறிமுகமானார்.

நீங்க என்ன ஊர் ?.

இதே ஊர் தான் காந்தி நகர்ல இருக்கன்.

எங்க படிச்சிங்க ?.

திருச்சியில எம்.எஸ்.சியும், பெரியார் யுனிவர்சிட்டியில எம்.பில் பண்ணன்.

ஆப்பா என்ன பண்றாரு ?

பிஸ்னஷ் பண்றாரு.

இதுக்கு முன்னாடி எங்கயாவது வேலை பாத்திங்களா?.

இல்ல.

ஏன் ?.

சும்மா தான் எங்கயும் முயற்சி பண்ணல.

மாலதி மேடம் அவுங்க இப்பத்தான் வந்துயிருக்காங்க. அதுக்குள்ள அவுங்கள ஏன் ராக்கிங் பண்றிங்க விடுங்க என ப்ரியா சொல்ல அந்த அறையே சிரிப்பால் அதிர்ந்தது.

ஏன் மேடம் கலாய்க்கறிங்க. புதுசா வந்துயிருக்காங்க. அவுங்களப்பத்தி உங்களுக்கும் தெரியாது. உங்க மனசுல இருக்கற கேள்வியையும் தான் நான் கேட்கறன் தெரிஞ்சிக்கிட்டா பழகா ஈசியா இருக்கும்மில்ல அதுக்குத்தான் கேட்கறன் என்றார்.

நீங்க கேளுங்க மேடம் என சுதா சொன்னதும்

கல்யாணமாகிடுச்சா

என கேட்டதும் சுதா அமைதியாகி சுதாவின் முகம் சுருங்கி கண்ணீல் நீர் கோர்த்தது. இதை பார்த்த மாலதிக்கு சுதா பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானது.

தொடரும்……………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக